♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 6 ஜூன், 2012

நல்வாழ்த்துக்கள்



அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய அன்னையர்   தின நல்வாழ்த்துக்கள்..

இன்று அன்னையர் தினம். அன்பை வாரி வழங்கும் மனிதத் தெய்வங்களை நன்றியுடன் நினைத்து வாழ்த்து சொல்லும் தினம்.

உலகெங்கும் எத்தனையோ தினங்கள். காதலர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர் தினம் என்று. ஆனால் அத்தனையிலும் புனிதமானதாக நாம் கருத முடியும் தினம் என்றால் அது அன்னையர் தினம்தான்.

அன்னை வழங்கும் அன்புக்கு அளவேது, விலையேது. வற்றாத ஜீவநதியாக அன்னையர் தரும் அந்த அளவில்லாத அன்புதான் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார சக்தி.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் கடவுளுக்கும் மேலாக அன்னையை வைத்த நமது பாங்கிலிருந்தே அன்னை என்பவள் அத்தனை பேரையும் விட உயர்ந்தவள், உயரியவள் என்பது புரிகிறதல்லவா.

ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையை உலகெங்கும் அன்னையர் தினமாக கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்காவில்தான் இந்த அன்னையர் தினம் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. இன்று உலகின் பல நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.


Wednesday, December 28, 2011


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…


வரும் ஆண்டு மட்டுமல்ல
வாழும் வருடங்கள் யாவும்
வளமுடன்
அமைய
வாழ்த்துகிறோம்..

இனிய 
புத்தாண்டு 
வாழ்த்துக்கள்....







Saturday, November 26, 2011


அனைவருக்கும் இனிய முஹரம் (ஹிஜிரி-1433) நல்வாழ்த்துக்கள்...........



அஸ்ஸ‌லாமு அலைக்கும்..!
அனைவருக்கும் இனிய முஹரம் (ஹிஜிரி-1433) நல்வாழ்த்துக்கள்...........
இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்:
முஹர்ரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்-கயிதா,துல்-ஹஜ்.
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். (அல்குர்ஆன்9:36)

Monday, November 14, 2011


அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...........


இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது அன்பு மழை பொழிந்த மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது.

1889
நவம்பர் 14ல் மோதிலால் நேரு மற்றும் சொரூபராணிக்கு மகனாக நேரு பிறந்தார்.தீன் மூர்த்தி பவனில் தோட்டத்தில் நேரு உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு அந்த குழந்தை இருக்கும் இடத்துக்கு அவர் சென்றார். பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தையின் தாய் அருகில் இருக்கிறாரா என்பதை அவர் பார்த்தார். இல்லை. அனேகமாக தோட்டவேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். குழந்தை அழுது கொண்டேயிருந்தது. அழுகையை நிறுத்த அவருக்கு வேறு வழியில்லை. உடனே குழந்தையின் அருகே சென்று தூக்கி, இரு கைகளிலும் வைத்து தாலாட்டினார். குழந்தை அழுகையை நிறுத்தியது. வந்து பார்த்த குழந்தையின் தாய்க்கு ஆச்சரியம். நம் குழந்தையா நேருவின் கைகளில் தவழ்கிறது என்று. இயல்பாகவே நேரு குழந்தைகள் மீது அளவற்ற அன்பு காண்பித்தார்.

Friday, July 29, 2011


அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்........

Friday, December 25, 2009


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…