♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா ! 

உங்கள் சேவைக்கு 
நீங்கள் தந்த கல்விக்கு 
நன்றி சொல்வது மட்டும் போதாது 
நான் என் ஆயுள் முழுவதும் 
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன் 

உங்கள் சேவையை என்றும் 
மறக்க மாட்டேன் ! 
நன்றியுடன் உங்களை 
நினைத்துப் பார்க்கும் 

உங்கள் மாணவன் ஆசிரியர்கள்  தின நல்வாழ்த்துக்கள்!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

நாங்கள் பரிட்சை எழுத 
நீங்கள் அல்லவா படித்தீர்கள் 
நாங்கள் வெற்றிப் பெற 
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள் 

கல்லும் உடையாமல் 
சிலையும் சிதறாமல் 
எங்களை செதுக்கிய 
சிற்பி அல்லவா நீங்கள் 

மழையின் அருமை தெரியாமல் 
மழையை கண்டு ஓடுபவர்போல 
உங்களைக் கண்டு ஓடினோம் 
மழையின் அருமை 
கோடையில் தெரியும் 
உங்களின் அருமை, பெருமை 
இப்போது உணர்கிறேன் !

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


எததனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால் 
நோக்கம், லட்சியம் ஒன்று தானே 
என் மாணவன் முன்னேற வேண்டும் 
தேர்ச்சிப்பெற வேண்டும் 
வெற்றி பெற வேண்டும் 
ஆஹா ! 
எத்தனை உயரிய எண்ணம் 
நீங்கள் அல்லவா 
வணக்கத்துக்குறியவர்கள் 


எத்தை கேலிகள் 
எத்தனை கிண்டல்கள் 
எத்தனை துன்பங்கள், தொல்லைகள் 
உங்களுக்கு செய்தோம் 
இன்று நினைக்கையில் 
என் உள்ளம் வலிக்கிறதே 
உங்கள் காலில் விழுந்து 
மன்னிப்பு கோருகிறோம் 
எங்களை மன்னியுங்கள் - ஐயா

இன்று வரையிலும் , இனிமேலும் 
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு 
நாங்கள் அடையும் புகழ்களுக்கு 
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா !

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

நாங்கள் செய்த தவறுக்கு 
தண்டனை எங்களுக்கு தந்து 
வேதனையை - நீங்கள் 
அல்லவா அனுபவித்தீர்கள் 

எத்தனை அன்பு , அரவணைப்பு 
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள் 
எல்லாம் எதற்கு 
எங்கள் வாழ்வு வளம் பெறதானே 

எததனை நாள் 
மழையில் நனைந்தீர்கள் 
வெயிலில் காய்ந்தீர்கள் 
பசியை மறந்தீர்கள் 

உங்கள் குடும்பத்தைவிட 
எங்கள் நலனில் தானே 
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு 
தண்டனை எங்களுக்கு தந்து 
வேதனையை - நீங்கள் 
அல்லவா அனுபவித்தீர்கள் 

எத்தனை அன்பு , அரவணைப்பு 
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள் 
எல்லாம் எதற்கு 
எங்கள் வாழ்வு வளம் பெறதானே 

எததனை நாள் 
மழையில் நனைந்தீர்கள் 
வெயிலில் காய்ந்தீர்கள் 
பசியை மறந்தீர்கள் 

உங்கள் குடும்பத்தைவிட 
எங்கள் நலனில் தானே 
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் 
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

ஒவ்வொரு குழந்தைக்கும்
அதன் தாய் தெய்வம்- அல்லவா
தாய் இல்லாமல் நாம் இல்லை
தாயை சிறந்த கோவிலும்மில்லை
உண்மைத் தானே ?


அன்னையர் தினத்துக்கு
பரிசு தர வேண்டாமா ?
பரிசுடன் புறப்பட்டேன்
என்னை பெற்றதுக்கு - இலஞ்சம்

கொடுக்க முதியோர் இல்லத்திற்கு ...!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

கை எடுத்து வணங்குகிறேன் 
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் 

நான் வாழ ! நான் முன்னேற! 
எனக்காக உழைத்தவர்கள் 
நான் இன்று இன்பம் காண 
அன்று துன்பம் பொறுத்தவர்கள் 

நான் முத்து சேர்க்க 
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள் 
என் இளம் வயதில் கண்ட 
நடமாடும் தெய்வங்கள் ! 
என் ஆசிரியர்கள்

4 கருத்துகள்: