♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

திங்கள், 10 ஜூன், 2013

பூவோடு சேர்ந்து குளித்தது பூ!


பூவோடு சேர்ந்து
குளித்தது
பூ!

வாடினால்
வதங்கும் மனசு
பூ!

பூ வியாபாரம்
கூடவே குழந்தைக்கு
உபசாரம்!

கொளுத்தும் வெயிலிலும்
குளிர்விக்கிறது அன்னையின்
அன்பு!

வெயிலுக்கு
கவசமானது
தண்ணீர் குளியல்!

வாட்டும் வெயிலில்
வாடாமல் சிரித்தது
குழந்தை!

வாசமுடன்
பாசமும் சேர்ந்தது
பூக்காரியின் குழந்தை!

குடும்பச் சுமையை
குறைத்து வைத்தது
குழந்தை!

பாச ஊற்றீல்
மூழ்கியது
குழந்தை!

உருக்கும் வெயிலில்
பெருக்கெடுத்தது தாயின்
பாசம்!

பூக்கடையில் ஒரு
விலையில்லா
பூ!

குழந்தை குளிப்பது
நீரில்மட்டுமல்ல
தாய்ப்பாசத்திலும்!

வாசம் மணத்தது மல்லியில்!
பாசம் மணத்தது
பிள்ளையில்!

வாடாமல் இருக்க
ஈரமானது
பூ!

ஈரமான மனம்
ஈரமானது
பூ!

thalirssb thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக