♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 25 ஜூலை, 2012

தாயகம் முதல் அமீரகம் வரை






கூடிய உறவின்
வாடிய முகம் கண்டு,
விழிதனில் மகிழ்வின்றி
விடைதர மொழியின்றி
நடந்திட வழியின்றி
நான் வரும் நேரம்


காத்திருக்கும் காதலிபோல்
ஓடுதளத்தில் நின்றிருந்தாய்...
வரமறுக்கும் காலிரண்டை
கம்பளமிட்டு வரவேற்றாய்...


பிரிவின் வேதனை அனல் கூட்ட,
குளிரூட்டிதனை கொண்டு
கனல் தணிக்க முற்பட்டாய்

வினாடி முள் விரைவாய் ஓடி
புறப்பட உனை வலியுருத்த
கனநேரம் பொருக்காது
எந்திரத்தை சுழலவிட்டு,
விசை முறுக்கி முன்சென்றாய்

எனை நானே கட்டிக்கொண்டு
இருக்கை'யிலே கைதியாக,
வழிநின்று வகுப்பெடுத்தாய்
வாய் மூடி குறிப்பெடுத்தேன்...

திறன் கூட்டி தளம் ஓடி
தரை நீங்கும் அந்நேரம்
கழுகது கைப்பற்ற.,
காப்பாற்ற கதறியழும்
இளங்கோழிக் குஞ்சினது
உளம் ஒத்து உறைந்து போனேன்.

விரும்பியதை கேள் என்று
பட்டியலை முன்வைத்தாய்..
அதை விரிக்க மனமின்றி
அப்படியே நான் கொடுக்க..
கொண்டதை கை தந்து
விருந்தோம்பல் கடன்கழித்தாய்

துயர்மறந்து துயில்கொள்ள ஒளிகுறைத்து நீ உதவ,
முகம்சிவக்க கதறிவிட்டு,கண்ணயரும் பாலகனாய்
சிறுதுயிலில் மெய் மறக்க...

பயணிகளின் கவனத்திற்கு...
பயணதூரம் குறைகிறது
இறங்கு தளம் தெரிகிறது
இடுப்புப் பட்டை தனை இருக்கி,
இயல்பாய் அமரக என
ஒலி பெருக்கி எனை பணித்தாய்...

பசுமைகண்ட உள்ளமது
பாலைகாண மறுக்கயிலே,
இல்லமதின் வறட்சி நீங்க
எண்ணமதை மாற்றிக்கொண்டேன்

இறகு மடித்து தரை இறங்கி,
அனல் பறக்கும் பாலை காட்டி
இறங்கி நட என்றுறைத்தாய்

அரபு நாட்டை தரம் உயர்த்த
தாய் நாட்டைப் பிரிந்த என்னை,
வருகவென வரவேற்றான்
ஆங்கோர்
வெண்ணிற ஆடை மூர்த்தி...


தொலைவில்
ரஜின்

ரமலான் சிறப்புகள்:


ரமலான் சிறப்புகள்:


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புனித மிக்க இந்த அருமையான ரமலான் மாதம் நோன்புக்குரிய மாதம்.  சிறப்பான மாதத்தினை நாம் அடைந்துவிட்டோம்..
இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா?

Free Orkut and MySpace ramadan mubarak Graphics Glitters
 நபிகள் நாயகம்(ஸல்) கூறுகிறார்கள்
”ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர  வேறு யாரும் நுழைய மாட்டார்கள்."

Free Orkut and MySpace ramadan mubarak Graphics Glitters
யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் “லைலத்துல் கத்ர்’ இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
“யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’
என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்ய  நபி (ஸல்) அவர்களும் ‘ஆமீன்’ என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதம் எவ்வளவ்வு மதிப்புகுரிய மாதம் என்று நாம் உணர வேண்டும் .
இந்த மாததில் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அதிகம் இறைவனை நினைத்து நாம் செய்யத அறிந்தும் அறியாமல் செய்த பாவகளுக்கு பிழைப்பொறுக்க து ஆ செய்யவும்.
”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,” என்கிறான் அல்லாஹ்.
Ramadan Mubarak
 லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி)
எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம். அல்லாஹ் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாகவும் ஆமீன்.

நிலவு - ஓர் உரைநடைக் கவிதை


நிலவு - ஓர் உரைநடைக் கவிதை



ஆம்! நிலவு...

நமை சூழ்ந்த எழில் எத்துனையாயினும்,
நிலவு ரம்யமான படைப்புதான்.

இரவை அலங்கரிப்பது,...
சாமகால காட்சியில் கதாநாயகனாய் உலாவருவது.

உலகின் நிகழ்வுகளை 
ஓசையின்றி நோட்டமிடும் ஒற்றை கண்'ணது,


கண்கள் உறங்கும் நேரம் விழிக்கிறது,
கண்விழிக்கும் போது மறைகிறது...

எதைச் சொல்ல இரவில் காய்ந்து,
பின் சொல்லாமலேயே பகலில் ஓய்கிறது???

குளுமையை மட்டுமே தன்மையாகக் கொண்டது.
பார்க்கும் விழிகளுக்கும்,விழிவழி மனதிற்கும்
குளுமையை தாராளமாய் தருவது.

ஈரேழு நாட்களிலே தேய்தலும்,..வளர்தலுமாய்
வாழ்க்கை தத்துவத்தை வடிவாய் உரைப்பது.

தத்துவமா??
ஆம்.வாழ்வெனில் அதில் மகிழ்வு,உயர்வென்ற வளர்ச்சிகளும்,
தோல்வி,துன்பமென்ற தேய்வுகளும் இருக்குமென....

மழலைகள் சோறுங்க
பல கதைகள் உனைத்தொட்டு,

மழலைமாறி நான் வளர,
இருளில் துணையாக வீடுவரை என்னுடன்,
முற்றத்திலும் நீ...கொல்லையிலும் நீ
திண்ணையிலும் நீ,ஓட்டின் இடுக்கிலும் நீயென,
என்னுடன் ஓடி,ஒழிந்து விளையாடி...

பதின்மத்தை நான் எட்டும் போது,
பலகனவுகள் கண்முன்னே
கனவுகளை கதைப்பதும் உன்முன்னே..

விழுதாய் நான் விழ வேராய்த் தாங்கிய,
என முன்னோர் கண்டதும் அதே நிலவு.
அன்னார் முகங்களை தன் ஒளியால் பதிந்ததும் அதே நிலவு,
இன்று என் முகத்தையும் பதிவாக்கிக் கொள்கிறது.
நாளை, நான் முன்னோராகிப்போக..
என், வழியின் முகமும் பதிவாகும்.

நிலவு - பழமையை உணர ஒப்பற்ற ஊடகமாய் நம் முன்.
காலம் மாற காட்சிகளும் மாறிடும்....
ஆனால்,அனைவரும் கண்ட காட்சி...மாறாக் காட்சியது நிலவு மட்டுமே..
காலச்சுவடாக ஏட்டில் கண்ட மனிதன் யாவரும் நிலவுக்கு பரிச்சியம்.
அவன் கண்ட,அவன் களித்த அதே நிலவு இன்று நம்முன்...

பல்வேறு காலங்கள்,பல்வேறு ரசனைகள்
பன்னாட்டு மக்கள்,பலகோடி சிந்தனைகள்
பலவித பருவம்,பன்நூறு எண்ணங்கள்,
என அத்துனைக்கும் பன்பரிமாணமாய்
நீ காட்டும் ஒற்றை முகம்...

தனக்குள் எத்துனை செய்திகளை கட்டிவைத்தும்!!!...
பார்வைக்கோ எளிய கோ(ல)ளமாய்....(Pause)

விழி விரியும் பிரம்மிப்பு அடங்கவே இல்லை...
நிலவைப் பார்த்து அல்ல....
நிலவைப் படைத்தவனைப் பார்த்து...

ஆம்...
பிரம்மாண்டங்களை ஆக்கிவிட்ட
ஏகனின் பிரம்மாண்டமான எளிய படைப்பு...

மனிதன் எத்தனை முயன்றாலும் இயலாததைப் படைத்து,
அதில் சிந்திக்க ஏகத்துக்கும் பொதித்து
அவனிருப்பை சாட்சி சொல்லும் அத்தாட்சியாக,,,

நிதமும் சுற்றுகிறது நிலவு....



நிலா ரசிகன்
ரஜின்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று நன்றி செலுத்தும் நன்னாளான ஷவ்வால் முதல் நாள் ஈகைத்திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.


புத்தாடை அணிந்து ஏழை எளியவர்களுக்கு ஜகாத் என்னும் தானதர்மங்களை வழங்கும் இந்நன்னாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக சாதிமத பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் நல்லமனதை நம் இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்..

அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..


ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்?





இன்று முதல் உலகின் பல பிரதேசங்களில் ரமழான் மாதம் தொடங்கி விட்டது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் பகல் முழுவதும் நோன்பு இருந்து, திருக்குர் ஆனை அதிகமான ஓதி, இரவு நேரங்களில் அல்லாஹ்வை வணங்கி இறை தியானத்தில் ஆழ்ந்திருப்பர்!.

நோன்பு என்பதை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றுகின்றனர். பொருளாதாரம், சமூக அந்தஸ்து, வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் நோன்பு நோற்கின்றனர். வயதானோர், நோயுள்ளவர்கள், சிறுவர், சிறுமிகள், மாதவிடாய் நேர பெண்கள், சமீபத்தில் பிரசவித்தவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு நோற்பதால் என்ன பயன்? பசியின் அருமையை நோன்பில் உணர்ந்து கொள்வார்கள் என்பதா? அப்படியானால் தினசரி ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடுபவன் ஏன் நோன்பு நோற்க வேண்டும்.... நோன்பு நோற்க வேண்டியதன் காரணத்தை அல்லாஹ் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.



يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ


ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் இறையச்சம் உடையோராக ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)


நோன்பு நோற்பதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராக (முத்தக்கீன்களாக) மாறலாம் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு என்பது என்னவென்று வரையறுத்தால் ரமழான் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை சுமார் 13 மணி நேரம் உண்பது, குடிப்பதை விட்டு விட வேண்டும். இச்சைகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட பேச்சுகளில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இறையச்சம் வர இயலுமா? இயலும். மனிதனால் அடக்க இயலாதவைகளில் முக்கிய இடம் வகிப்பவை பசியும், தாகமும், இச்சையும். நோன்பு நேரங்களில் இவைகளை அடக்குவதன் மூலம் மனிதனின் மனம் செம்மைப்படுகின்றது. மனிதனுக்கு அரசோ, சமூக அமைப்புகளோ கட்டுப்பாடுகளை விதிக்கும் போது யாரும் பார்க்காத நிலையில் அவன் கட்டுப்பாடுகளை மீறத் துணிகின்றான். ஆனால் நோன்பு இருக்கும் போது நம்மை அல்லாஹ் எங்கு சென்றாலும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நினைவிலேயே இருந்து பசி, தாகம், இச்சைகளை அடக்குவதன் மூலம் மனிதன் ஒரு சுய கட்டுப்பாடான நிலைக்கு வருகின்றான்.

இந்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்ற மாண்பு மனிதனை இறையச்சம் உடையவனாக மாற்றுகின்றது. அதே போல் கெட்ட நடத்தைகள், கெட்ட பேச்சுகளையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்ர எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் மனிதனை செம்மையாக்கி சமூகத்திற்கு தரக் கூடியதாக நோன்பு மாறி விடுகின்றது. கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விடாதவர்கள் நோற்பது நோன்பாகாது. அது வெறும் பட்டினி என்பதிலேயே சாரும்.

இந்த இனிய ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக!


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!

மீள் பதிவு.

இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!


இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!







இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
=============================


*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

ஃபித்ராவின் சிறப்பும் +பெருநாள் வாழ்த்தும் !


ஃபித்ராவின் சிறப்பும் +பெருநாள் வாழ்த்தும் !

 அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்......


புனித  ரமலான்  முழுவதும்  பகல்  பொழுதில்  நோன்பிருந்து, இறுதி  நோன்பை  முடித்து, அதற்கடுத்த  தினம்  ஈகைப்  பெருநாளை  கொண்டாடி  மகிழ்கிறோம். பத்தாடை  அணிந்து, நறுமணம்  பூசி,சுவையான  உணவுகளை  உண்டு  கழிக்கிறோம். அல்லாஹ்வுக்கு  நன்றி  கூறுகிறோம். இவ்வாறு  மகிழ்வுடன்  இருக்கும் போது நம்  கண்ணெதிரில், நம்  பக்கத்து  வீட்டில்,அடுத்த  தெருவில் நம்மைச்  சுற்றி  எத்தனையோ  ஏழைகள்-சகோதர,சகோதரிகள் நம்மைப் போன்றே  நோன்பு  நோற்று  விட்டு பெருநாளை  மகிழ்ச்சியுடன்  கொண்டாட முடியாமல்  வாடிக்  கொண்டிருப்பார்கள். இந்நிலை ஏற்படாமல் வசதி  படைத்தவர்களைப்  போன்றே எல்லாமக்களும்  மனங்குளிர  உணவருந்த வேண்டும்  என்பதற்காக  இறைவனால்  வழங்கப்பட்ட  திட்டம்  தான்  பித்ரா  எனும்  பெருநாள்  தர்மம்  ஆகும்.


முஸ்லிமான  ஆண்,பெண்,சிறியவர்,பெரியவர்,பணியாட்கள் அனைவருக்காகவும் பெருநாள் தர்மத்தை  நபி {ஸல்} கடமையாக்கினார்கள்  என்று  இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}
உணவு பொருட்களாகவோ,பணமாகவோ  பித்ராவை  வழங்கலாம்.
பெருநாளைக்கு  சில  தினங்கள்  முன்பாகவே  இதனை  வழங்குதல்  சிறப்பாகும் நபித்  தோழர்கள்  பித்ராவை பெருநாளைக்கு சில நாட்கள்  முன்பாகவே  கொடுத்து  வந்தனர் என்று இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}


பெருநாள் தொழுகைக்கு  முன்னரே பித்ராவை கொடுத்துவிடுமாறு  நபி{ஸல் அவர்கள்  கூறியதை,இன்றைய  மக்கள்  பெருனாளன்று  காலையில்  ஏழைகளைத்  தேடுமளவு  ஆக்கி  கொண்டார்கள்.


பித்ரா தரமானதாகவும்  பிறர்  உண்ணும் வகையிலும் இருக்க வேண்டும்.
ஒருவர்  மட்டகரமான  பேரிச்சம்பழத்தை  கொண்டு வந்தார். அதை நபியவர்கள்  பெற்று கொள்ளாமல்,  அதை கணக்கில் எடுத்து  கொள்ள வேண்டாம்  என்று  தடுத்து  விட்டார்கள். இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}

  
நபித்தோழர்கள் காலத்தில்  இருகைகளால்  உணவு பொருகளைப் வாரி வழங்கி  அதனை  ஒரு  ஸாவு என கண்கிட்டார்கள்.

இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்.
இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாகவோ அல்லது பணமாகவோ கொடுக்க வேண்டும்.



பித்ரா  நோக்கத்தையும், அதன்  சுன்னத்தான  முறையையும்  நாம் உணர்ந்து, ஏழை  முஸ்லீம்களையும் சந்தோஷமாக  பெருநாள்  கொண்டாட  வகை  செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் ....

                                                                

                                                                
அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ் ...                                                              

                அனைவருக்கும்  ஈத்  பெருநாள்  நல் வாழ்த்துக்கள்.  


                                                              உங்கள் சகோதரி 
                                                               ஆயிஷா  அபுல் .


புனித ரமலான் மாதமும் நம்மை கடந்து செல்கிறது. பிரிய மனமின்றி ஏக்கத்துடன் விடை கொடுப்போம்.எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !


ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !

வலைப்பூ நண்பர்கள்,வலைப்பூ பதிவர்கள், வலைப்பூ 
வாசகர்கள், மற்றும் வலைப்பூ திரட்டிகளான 


தமிழ்மணம்,இன்ட்லி,தமிழ்வெளி இன்னும் பிற 
உங்கள்  அனைவருக்கும் என்னுடைய  

" இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் "  

திங்கள், 23 ஜூலை, 2012

பெருநாள் நல்வாழ்த்துக்கள்!


'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

بسم الله الرحمن الرحيم
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், நாளை [31 -08 -2011 ] கொண்டாட விருக்கும் சகோதர- சகோதரிகளே! உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த
'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

என்றும் இறைப்பணியில்,

'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், 


இன்று கொண்டாடும் அணைத்து சகோதர- சகோதரிகளே! உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த

'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

புதன், 18 ஜூலை, 2012

இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))


இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 
(அல்குர்ஆன் 2:183) 



அன்புள்ள சகோதர சகோதரிகளே... 

இனிய ரமலான் மாதம் அடி மேல் அடி வைத்து நெருங்கிக் கொண்டே இருக்கிறது.... மனமுவந்த விருந்தினரை வரவேற்கும் முகமாய், பாசமும், அன்பும், விருந்தோம்பலும், 365 நாட்கள் காத்திருந்த நேரத்தின் வேதனையை மறைக்கும் முகமாய்... அப்பப்பா... எண்ணிலடங்கா எண்னங்களுடன் வாசலை நோக்கியவாறே...உங்களுடன் நானும். 

இந்த வருட ரமலானில் என்னென்ன செய்து விருந்தினரை மகிழ்விக்கலாம் என முடிவெடுத்து விட்டீர்களா??? என் முடிவுகள் இன்ஷா அல்லாஹ் நாளை... நீங்களும் தயார் செய்து கொண்டு வாருங்கள்... நல்லமல்களை ஒரு சேர முயன்று வெல்வோம்... தீயவற்றை தடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்... இன்ஷா அல்லாஹ்... 

அல்லாஹும்ம பலக்ன ரமதான்..... ஆமீன்... ஆமீன்... அல்லாஹும்ம ஆமீன்... 

செவ்வாய், 17 ஜூலை, 2012

அன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,


அன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,


 பிறந்தவன் நீ!
சகோதரிகளுக்கு சிறந்த  காவலன் நீ!
வீட்டில் போடும் செல்ல சண்டையின் வேட்டைக்காரன்நீ!
உடன் பழகும் பிள்ளைகளுக்கு உற்ற நண்பன் நீ!
நீ பயிலும் பள்ளியில் மாண்புமிகு மாணவன் நீ!
விளையாட்டில் கில்லிநீ!
சச்சினின்தீவிர ரசிகன் நீ!
சில சமயங்களில் மொக்கை போடுவதில் “திருப்பாச்சி அருவாள் நீ!
சைக்கிள் ஓட்டும் வேகத்தில் “சுறா நீ
வீட்டில் அனைவருக்கும் அழகிய தமிழ் மகன்  நீ!
எதையும் “நேருக்கு நேர் எதிர் கொள்வதில் வேலாயுதம் நீ
எங்களுடன் ஒன்ஸ்மோர் அடுத்த ஜென்மத்திலும் பிறக்க வேண்டும்.

 
 சகோதரன் என்பவன் குழந்தை பருவத்தின் ஒரு பகுதி.  
அவ்வரம் அமைய பெற்றவர்கள்
யாரும் அதை இழக்ககூடாது. 
சகோதரிகள் எங்களுக்காக  நீ 
பிறந்ததற்கு எங்கள்  நன்றி! 
 
சகோதரன் என்பவன் மிகப்பெரிய பரிசு. 
உன்னை எங்களுக்கு சகோதரனாய் தந்ததற்கு
கடவுளுக்கு எங்கள் நன்றி.
உன்னைப் போன்ற சகோதரன் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

சகோதரன் என்பவன் ஒரு 
உற்றத் தோழன் வாழ்க்கையில்,
உன்னை எங்கள் சகோதரனாய் 
அடைந்ததற்கு பெருமைக் கொள்கிறோம்.

 
டிஸ்கி: அம்மா கொஞ்சம் பிஸி என்பதால் எங்கள் அன்பு சகோதரன் பிறந்த நாள் பதிவை நாங்கள் போடுகிறோம். அனைவரும் அவனை வாழ்த்த வேண்டுகிறோம். அவனுக்கு இது 12வது பிறந்த நாள். அவன் விஜயின் ரசிகன். அதனால் 12 வரிகளில், விஜய் படம் வருமாறு கவிதை எழுத முயற்சி செய்தோம்.
இப்படிக்கு 
தூயா, 
இனியா.




  1. rajiyinkanavugal.blogspot.com thanks

வாழ்ந்து காட்டடி வண்ண மயிலே...,


 
பொன்னை விரும்பும் பூமியிலே...,
பெண்ணை விரும்பினான்!?

பெண்ணை விரும்பியவன்...,
இன்னும் பிற பின்னர் விரும்பினான்!?

பெண்ணை மட்டும் விரும்பியவன்...,
பிறவற்றை மறைத்தானா? மறந்தானா?

இன்ன பிறவற்றையும் விரும்பியவன்..,
இதயம் கொண்டவளை கொன்றுவிட்டானே,

இன்ன பிற நிறைந்த மனத்தவனை...,
மறைத்தவனை மனம்கொண்டு மரிப்பதைக் காட்டிலும்,...

தன்னிதயம் தகர்த்த, நெறிகெட்ட மானிடனை..,
களையெடுத்து கன்னி அவள் மீண்டு...,

மீண்டும் வசந்தம் வர,
காத்திருப்பதே...,

பொன்னான, கண்ணான கன்னியவளுக்கு நன்றென புரியும் - 
காலம் பதில் சொல்லும் காத்திரம்மா,
அன்பெனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தவனே வாத்தாவான்,  
வாத்து மடயனாவான்,  
பார்ப்பாயடி, வாழ்ந்து காட்டடி.


rajiyinkanavugal.blogspot.com thanks

நச்சென்று சில காரணங்கள்


நச்சென்று சில காரணங்கள்

ஆசை மொழியானாலும், சண்டையானாலும் நான் சொல்ல வரும் கருத்துக்களை, என்னை முந்திக் கொண்டு அழகான வார்த்தைகளால் கூறிவிடுகிறாய்...., அந்த புரிதல் .


உன்னை நான் எதற்காகவும், எங்கும் விட்டுக் கொடுப்பதில்லை. அந்த என்
உள்ளுணர்வு .

யாரையுமே கண்ணோடு கண் கொண்டு பார்த்துப் பேசும் என்னால் உன்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், என் பார்வையை விலக்கிக் கொள்வேன். அந்த ஆயிரமாயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தேக்கி உள்ள உன்
பார்வை .
கண்களும், நினைவுகளும் திறந்திருக்கும் வேளையில் மட்டுமல்ல, அவை
மூடியிருக்கும் வேளையில்கூட விலகாமல் இருக்கும் உன்
நினைவு

நீயும், உன் நினைவுகளும் இல்லாத நொடிகளில், நின்று போன இதயத்தின்
அமைதி

என்னுடன் உன்னை கூட்டி செல்கையில், எங்கோ தொலைந்து போன
உன்னை அன்றிலிருந்து தேடும் என் தேடல்
என் உணர்வுகள் அனைத்தும் உன் தோளில் மட்டுமே இளைப்பாறவேண்டும்என்று எண்ணும் உன் கோரிக்கை.
ஆனால் நீ மட்டும் உன் உணர்வுகளை என்னிடம் பகிராமல் இருக்கும் உன் அகங்காரம்

என் வாழ்க்கைத் துணைக்கான அத்துனை தேடல்களின் இடத்தையும்ஆக்கிரமித்த
உரிமை.
உன்னோடு நானும், என்னோடு நீயும் இருக்கும்போது நாமாகிப் போனோமேஅந்த பன்மை

எல்லாரையும் போலதான் நமக்குள் சண்டை வருகிறது. எல்லாரையும்போலதான் சமாதானமும் ஆகிறோம், ஆனால், சமாதானமாக யார் விட்டுக்கொடுப்பதென நீளும்
சண்டை.

உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்பதை சொல்லாமல் சொல்லும் உன்
கோபம்

தவறு என்மீது இல்லையென்றாலும்.., என்னை ஒரு வார்த்தை, பதில்கூட பேசவிடாமல் செய்துவிடும் உன்
திறமை.

நாமிருவரும் சந்திக்கையில் நாம் பேச இயலா சூழலில் இருந்தால், நமக்குமுன்நம் கண்கள் பேசிவிடும் அந்த
கண்களின் மொழி.

கண்ணுக்கெட்டாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கைவிரல்களில் இருக்கும்உன்
வாசம்
பொறாமைக்கோ , கர்வத்திற்கோ துளிகூட நம்மிடம் இடமில்லை. வேறென்னவேண்டும் வாழ்வில்.

டி போட்டு யார் பேசினாலும் உனக்கு பிடிக்காது. ஆனால் நான் மட்டும்உன்னை நான் பார்த்த நாள் முதல் கொண்டு டி போட்டு தான் பேசுகிறேன். எனக்குமட்டும் நீ அளித்த அந்த
விதிவிலக்கு

யார் அதட்டலுக்கும் அசராத நான், உன் அதட்டலுக்கு மட்டும் அடைந்து விடும்
சரண்

நேரில் கேட்பதற்கு நேர்மறையாக ஒலிக்கும் உன் தொலைபேசி
குரல்

திரைப்படங்கள் நம்மிடம் தோற்றுப் போகும் நாம் பேசினால். நம் ஒரு நாள்சண்டையிலும், சமாதானத்திலும் ஒரு திரைப்படம் அளவிற்கு இருக்கும்
வசனங்கள்

என் உயிரோட்டம் எதனால் நிகழ்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால்அத்துணைக்கும் நீயே
காரணம்

சோகங்களில் நான் சுருண்டு விழும்போதெல்லாம் ஆலம் விழுதாய்தாங்குவாய். துன்பங்கள் என்னுடையதென்றால், வலிகளை உன்னுடையதைமாற்றி கொள்ளும்
நேசம்

நம் ஐந்து விரல்களும் ஒன்றோடு ஒன்றாய் இருக்கையில் என் கோடிதுன்பங்களும் கால் தூசிதான். அந்த
வலி நிவாரணி.

சொன்னதையே நான் திரும்ப திரும்ப சொன்னாலும் , அலுக்காமல் கேட்கும்உன்
பொறுமை

இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என முடிவெடுத்து தொலைப்பேசியைவைத்த சிறிது நேரத்தில், மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து மாத்திப்பண்ணிட்டேன் என வழிகையில் , புரிந்துக் கொண்டு அமைதியாய் சிரிக்கும் ஒரு
குறுஞ்சிரிப்பு

"
நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்து, " நீ" வேண்டும் என்று நீண்டு இப்போதுநீ மட்டுமே" வேண்டும் என்றில் வந்து நிற்கும் என் "பாதை

சரியோ? தவறோ? என் பாதைகள் தெரியவில்லை. வழித்துணையாய் நீஇருக்கிறாய் என்று நம்பும் என்
நம்பிக்கை

யாருக்கும் எந்த தீங்கும் நீ நினைபபதில்லை. உன்னை துன்பபடுத்தும் நான்கூட நல்லா இருக்கணும்னு நினைக்கும்
அக்கறை.

நான் உன்னை காதலிக்கிறேன். கொஞ்சம் எனக்காக. நிறைய உனக்காகஎன்னும் என்
பங்கு .

இருபத்திநாலு மணிநேரம் பேசினாலும் அலுக்காது நமக்கு. அதுசரிஆசைமொழி அலுத்துப் போகும், அன்பு மொழி அலுத்து போகாது என்னும்
உணர்தல்

என் பைத்தியக்காரத்தனம் அத்துனையும் உனக்கு பிடிக்கும், பின் எப்படிஉன்னை எனக்கு பிடிக்காமல் போகும். என் பைத்தியக்காரத்தனத்தை சகித்துக்கொள்ளும் உன்
பொறுமை

என் எந்த செயலையும் நீ கேலி செய்வதில்லை. அப்படியே என்னைஏற்றுக்கொண்ட
மனப்பாங்கு

இறுக்கமாக விரல்களை பற்றிக் கொள்ளும்போது என் வலிகள் தெரிவதில்லை. எங்கே கற்றுக் கண்டாய் அந்த
வித்தையை

அன்பு மட்டும் போதாது காதலுக்கு என்று சொல்லி என் மீது நீ வைத்த
நம்பிக்கை

என்னை அழ வைப்பவன் நீ. என்னை சிரிக்க வைக்கவும் தெரிந்த
மாயாஜாலக்காரன்

உன் தோள்களில் நான் சாய்கையில் கண்ணில் கண்ணீர் மல்கும். கடைசி வரைநீ நிலைக்கப் போவதில்லையே என்னும்
ஏக்கம்

என் பாரங்கள் அத்துனையும் கரைத்துவிடும் உன் ஒற்றை சொல் ----------
காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ, அதைவிட அதிகமாகவே நீ தந்த அந்த கொடை.

நீ விளையாடும் விளையாட்டை
கூட இஷ்டமான எனக்காக விட்டு தராத பிடிவாதம்.

எனக்கென்று இறைவன் ஒதுக்கி வைத்த நேரம் இருக்கிறது. அவற்றைஉனக்காக மட்டுமே செலவழிக்கிறேன். உன்னை
கண்ட நாள் முதல் .

என் ஆதி முதல் அந்தம் வரை உனக்கு அத்துப்படி.., ஆனால் உன்??!! அந்த
புரியாத புதிர் .

எதன்பொருட்டோ பாராட்டவோ, திட்டவோ, இல்லை கருத்துஏதாவது தெரிவிப்பாய் என காத்திருக்க கிணற்றில் போட்ட கல்லாய் இருக்கும்
விட்டேற்றித்தனம்.

நான் உன்னிடம் நிபந்தனையிட , நமக்குள்ளே எந்த நிபந்தனையும் வேணாம்னு கூறி ...., உன் நிபந்தனையை என்மேல் திணிக்கும்
ஆளுமை

தெரிந்தோ, தெரியாமலோ என்மீது படிந்துவிட்ட உன்
சாயல்

எலியை பிடிக்கவும், தன் குட்டியை தூக்கவும் ஒரே பற்கள்தான் பயன்படுகிறதுபூனைக்கு. அதுப்போன்ற உன்
கரங்கள்.

அளக்க முடியாத அளவிற்கு சந்தோசங்கள் நிறைந்த வாழ்க்கை. நீவந்ததற்கு பிறகு..., சாமி கொடுத்த வரம். கடவுளே வரமாய் கிடைத்துவிட்ட திருப்தி எனக்கு
என் இதய ஆழத்தில் உள்ள உணர்வுகளை காட்டும் விளக்கு நீ


கடவுளும் நீயும் ஒன்று. ஏனெனில், இருவருமே எதிர்பார்ப்பவற்றை தராமல் ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்கள்.

நாளை என்ன நடக்குமோ யாமறியேன். ஆனால் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடங்கள் மறக்க முடியாதவை. என்னோடு நீ இருந்ததால் மட்டும்


காதல் என்பது எவ்வளவு தூயமையானதோ அதைவிட அதிக தூய்மையை கண்டேன் நான் உன்னிடம்

என் ரகசிய தேசத்தின் காவலாளி நீ . உன்னை மீறி என் ரகசியங்கள் எங்கும்போவதில்லை .

பொக்கிசமாய் பாதுகாக்கப் படவேண்டிய பொருள் என்று ஏதுமில்லை என்னிடம். உன் நினைவுகளைத் தவிர.
நிமிடத்திற்கு எத்தனைதரம் துடிக்குமோ இதயம் எனக்கு தெரியாது. நீ இருக்கிறாய் அத்தனை துடிப்பிலும்.

உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயத்துடிப்பின் துடிப்பு ஒன்றுகாணாமல் போய்விடுகிறது.
திருடா

எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்
எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனது நீ அருகில் இருக்கையில் மட்டும்.

மனத்திலும், உடலிலும் எத்தனை வலி இருந்தாலும் சாய்ந்த உடனே வலிகளை போக்கிவிடும் உன்
மடி

இந்த நிமிடமே நான் இறந்துகூட போவேன் சந்தோசமாய். ஏனெனில் என்மீதுஅன்பு செலுத்தும்
தேவதையை கண்டுக் கொண்டேன், கண்டு கொண்டேன்.

வெகுநாட்கள் காணாமல் இருந்துவிட்டு பார்க்கும்போது பிணைத்துக்கொள்ளும் கைகளில் உள்ள
நெருக்கம்

கண்டு விட்டு பிரியும்போது 'திரும்பி பார்க்கக் கூடாது" என எனக்கு நானேநூறு முறை சொல்லியும், சொல்பேச்சுக் கேளாமல் அடமாய் திரும்பிபார்க்கையில்..., எப்படியும் நான் திரும்பிப் பார்ப்பேன்..., கையசைக்கலாம் எனக்பார்த்திருக்கும் உன்
காத்திருப்பு

கிறுக்குத் தனமாக எதாவது செய்து விட்டு உன்னிடம் நான் வாங்கும்
குட்டு, வலிக்கும். ஆனா வலிக்காது

என்னை பொறுத்தவரை வண்டி ஓட்டுவது ஒரு சிலருக்குதான் அழகு. அப்படிஓட்டுபவர்களில் நான் ரசித்தவர்கள் ஒரு சிலரே. அதிலும் உனக்கே
முதலிடம்.

என்ன தவறு நான் செய்தாலும் , உன்னிடம் எனக்கு கண்டிப்பாக உண்டு
மன்னிப்பு.
உன்னிடம் ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து விட்டு, கண்டிப்பாய் எனக்காக இதை செய்வாய் என நம்பி இருக்கும் என் ஏமாளித்தனம்


என் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டாலும்... கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளைப் போல் meendum, meendum உன்னிடமே எதிர்நோக்கும் என் எதிபார்ப்பு


இந்த கேள்விக்கு இந்த பதில்தான் சொல்லுவே..., இப்படி பேசினால்இப்படி எதிர்கேள்வி கேட்பே னு நம்பி பேசினால் கண்டிப்பாய் அந்த கேள்வி பதிலை choice விட்டுவிடுவாய்.

அந்த choice களை இன்றுவரை தொடர்ந்து வரும் உன் சாகசம்.

அந்த choice களை நீ தொடர்வதால் உன்னிடம் இன்னும்கூட சொல்லாமலே விட்ட ரகசியங்கள்

நாம் அறிந்தோ அறியாமலோ நமக்குள் ஒன்றாய் அமைந்துவிட்ட ரசனைகள்.

தொலைப்பேசியில் தான் பேசுவோம். முகம் காணாவிட்டாலும் என்உணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி சொல்லும் உன்
கெட்டிகாரத்தனம்.

பிறந்த நாள், பொங்கல், திபாவளி அது, இது லொட்டு லொசுக்குக்கு ஏன் வாழ்த்தலை னு கேட்டால், அந்த நாளும் மற்றொரு நாளே னு சமாளித்து நீ அள்ளிவிடும்
தத்துவ முத்துக்கள்

எனக்கு பிடிக்காது என அந்த டாபிக்கையே விலக்குவதாக்..., நடிக்கும் அந்த
நடிப்பு
எனக்கு பிடிக்காத டாப்பிக்கை நீ தொடவே மாட்டேன் னு நம்பி இறுமாந்திருக்கையில், அதை தெரிந்தும் திடுமென்று அதைபத்தி பேசி என்னை நிலைகுலைய வைக்கும்அந்த திமிர் .

யாரையும் நம்பாதே னு சொல்லி, உனக்கே தெரியாமல்.., உன்னை மட்டுமே நம்பணும்னு திணிக்கும் உன்
திணிப்பு.

உன்னை மட்டுமே நான் கொண்டாடனும்னு நினைக்கும் உன்
ஆசை

ஆனால், அதுபோல் நீ நடக்காமல் என்னை அவமதிக்கும் உன்
செயல்

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் ஆயிரம் காரணம் வைக்க முடியும் அளவுக்கு என்னை கவிஞனாய் மாற்றிய
பெருமை உனது.
வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்த மாதிரி இருக்கும்என் வேட்கை
இப்படி பொது இடத்துல எழுதலாமான்னு என்மீது கோபப்பட்டுக்கொண்டே இதை ரசிக்கும் உன் ரசனை
இளங்கதிர் புறப்படும் வரை நீண்ட தொலை பேசி உரையாடல்கள். விடிந்தப்பின்னும்..., முடியாமல் தொடர்ந்த..., குறுஞ்செய்திகள்..,

வேண்டாம் முடித்துக் கொள்வோம் என தினம் தினம் முற்றுப்புள்ளி வைத்து அதுவே இன்று தொடர்புள்ளியான அதிசயம்.
சட்டென்று கோபப்படும் நான். நீ என்ன பிழைசெய்தாலும் உன்மீது எனக்கு இதுநாள் வரை வராத கோவம்.
நான் சொல்றதெல்லாம் பொய், எங்கிருந்தோ சுட்டதுனு தெரிஞ்சும் என்னைநம்பி உக்காந்து படிக்குறே பாரு அந்த வெகுளித்தனம்.

தலைப்பிற்கும், சில கருத்துக்கள் தந்ததற்கும் நன்றி:
anaadhaikathalan.blogspot.com


rajiyinkanavugal thanks