♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

செவ்வாய், 17 ஜூலை, 2012


வாழ்ந்து காட்டடி வண்ண மயிலே...,


 
பொன்னை விரும்பும் பூமியிலே...,
பெண்ணை விரும்பினான்!?

பெண்ணை விரும்பியவன்...,
இன்னும் பிற பின்னர் விரும்பினான்!?

பெண்ணை மட்டும் விரும்பியவன்...,
பிறவற்றை மறைத்தானா? மறந்தானா?

இன்ன பிறவற்றையும் விரும்பியவன்..,
இதயம் கொண்டவளை கொன்றுவிட்டானே,

இன்ன பிற நிறைந்த மனத்தவனை...,
மறைத்தவனை மனம்கொண்டு மரிப்பதைக் காட்டிலும்,...

தன்னிதயம் தகர்த்த, நெறிகெட்ட மானிடனை..,
களையெடுத்து கன்னி அவள் மீண்டு...,

மீண்டும் வசந்தம் வர,
காத்திருப்பதே...,

பொன்னான, கண்ணான கன்னியவளுக்கு நன்றென புரியும் - 
காலம் பதில் சொல்லும் காத்திரம்மா,
அன்பெனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தவனே வாத்தாவான்,  
வாத்து மடயனாவான்,  
பார்ப்பாயடி, வாழ்ந்து காட்டடி.


rajiyinkanavugal.blogspot.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக